மேற்கின் ஒரு பக்கம்

புகை மூட்டமாகக் கவிந்திருந்தது. சுருள் சுருளாக, வளையம் வளையமாக புதிய புகைகள் வந்துகொண்டிருந்தன. இந்தக் கரும்புகைகள் எல்லாம் மேலே போய் மழையானால் அவ்வளவுதான். உலகமே வெள்ளத்தினால் மூச்சுத்திணறும். இல்லாவிட்டால் இருமும். சூழலை மாசடைவது பற்றியோ, தங்கள் சோர்ந்த நுரையீரல்களைப்பற்றியோ எந்த அக்கறையுமின்றி அவர்கள் தங்களால் முடிந்தளவு ஊதித்தள்ளியதைப் பார்த்து கவலையில் நானும் ஊதினேன். எல்லோர் வாயிலும் வாழைப்பழத்தில் சாம்பிராணிக் குச்சி குத்தியிருப்பதுபோல் வேறுவேறு விதமான சிகரெட்டுக்கள் சொருகியிருந்தன. மிஹெல் ஒன்றைப் பூரணமாக சாம்பலாக்கி, அடுத்ததை புகையிலை வைத்து … Read more