ஒரே ஒரு ஊரிலே
மாலை வெயில். வானம் மஞ்சள் பூசியிருந்தது. மேகங்கள் நிதானமாகப் போய்க் கொண்டிருந்தன. காற்று குளிர்ச்சியாக வீசியது. அந்தக் கொட்டிலிலிருந்து ரியூசன் முடிந்து, எல்லோரும் வெளியே வந்தனர். அவரவர் குடும்பத்தின் பொருளாதார நிலமைகளுக்கேற்ப வர்ணங்களிலும், தராதரங்களிலும் வேறுபட்ட உடைகளுடன் இளைஞர், இளைஞிகள் கலகலத்து வந்தனர். சைக்கிளில் சிலர் முண்டியடித்துக் கொண்டோடினர். தோழர், தோழிகளுடன் சிலர் குழுக்களாகப் போனார்கள். எல்லோரும் வெளியேறினாலும் இரண்டு பேர் மட்டும் அதே இடத்தில் மரத்தின் கீழ் காத்திருந்தனர். யோன் – காஞ்சனா எனப்பட்ட அவர்களை … Read more