பனியில் எரியும் இரவுகள்
கடைசி மூட்டையையும் தூக்கி கீழே வீசிவிட்டு நிமிர்ந்து, நாரி உளைவெடுத்து, வியர்வையைக் கையால் வழித்து எறிந்து, லொறியில் சாய்ந்துகொண்டபோதுதான் அந்த யோசனை வந்தது. இந்த லொறி என்ரை லொறியாயிருந்தா..? முருகேசு ஒரு மூட்டையில் குந்தியிருந்து ஆட்களின் சுறுசுறுப்பை அளந்து கொண்டிருந்தான். பணம் பூசிய உடம்பு. அவனருகில் போய்.. “முருகேசு.. அடிக்கடி கொழும்பு போய் வாறாய். கட்டுபடியாகுதுதானே..?” “பெரிசா சொல்லுறதுக்கில்லையடாப்பா. அங்கை வெளிக்கிட்டு இஞ்சை வாறவரைக்கும் கப்பம் கட்டிக்கொண்டே வரவேணும். இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தியிலயும் பரியர் போட்டுக்கொண்டு தடியங்கள் … Read more