தெரியவராதது

ஆரம்பிக்கும் போதிருந்த மனநிலை இப்போதில்லை. அதுபாட்டுக்குப் புல்லாகிப் பூடாய், புழுவாகிப் பாணியில் எரிச்சலாகி, சலிப்பாய், விரக்தியாய் முடிந்தது. இது வழமைதான். வராவிட்டால் எங்கே என்று ஏங்கும். வந்தாலோ பழைய கதைதான். ‘பாவம் அதுகள். நான் உதவாம ஆர் உதவுறது? என்னை விட்டிட்டு அதுகளும் ஆரிட்டப் போறது’ என்று கவலைப்படும் அவனுக்குப் பெயர் பாலகிருஸ்ணன். பாலு என்று வீட்டிலும், இங்கேயும் வசதிக்குச் சுருக்கிக் கூப்பிட்டார்கள். அடுத்த விசாப் புதுப்பித்தலுடன் வயது இருபத்தைந்து முடிந்து விடும். தலைமுடி இதற்குப் பொய்ச்சாட்சி … Read more