காதல்

மறுபடியும் கண்கள் வலப்பக்கம் திரும்புவதை ஜீவனால் தவிர்க்க முடியவில்லை. விட்டுவிட்டான். அவள் மறுபடியும் தெரிந்தாள். ஜீவனின் கண்கள் தன்னில் ரோந்து செய்வதை அறியாமல் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போதும் அவள் அழகாகவே இருந்தாள். ஜீவனின் கண் நரம்புகள் அவசரமாக மூளைக்கு சிக்னல் கொடுக்க அதுவும் அவசரமாக விழித்து கடமையைக் கவனித்தது. ‘அதென்னெண்டு டொச் பெட்டையளுக்கு இப்பிடி செழுமையான கன்னங்கள்? கட்டையா வெட்டினாப் பிறகும் தலைமுடி அழகாக இருப்பதன் மர்மம் என்ன? உதடுகள் ஏன் சிவந்து … Read more