ஒரு பிரஜை, ஒரு நாடு
1987, மே.22, வடமாராட்சி. ஊர் அமைதியாக இருந்தது. விலங்குகளும் சத்தம் போடவில்லை. பாதை விளிம்புகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உறக்கத்திலிருந்தன. எந்த வீடும் வெளிச்சமாயிருக்கவில்லை. பாடசாலையிலிருந்து 3 வீடுகள் தள்ளியிருந்த அந்த வீடும் அமைதியாயும், இருளாயும் இருந்தது. வீட்டினுள் உருவங்கள் சத்தமின்றி நடமாடின. பழகிப் போய்விட்டதால் இருளில் நடமாடுவதற்கு அங்கு உருவங்கள் தடுமாறவில்லை. ‘அம்மா பயமாயிருக்கம்மா’ மிக மெதுவாக அந்தச் சிறுவன் பயப்பிட்டான். ‘உஷ். பயப்பிடாத. ஒண்டும் நடக்காது.’ அவன் அருகிலிருந்த அம்மாவின் குரலிலும் கலக்கம் கலந்திருந்தது. கடிகாரம் … Read more