ஒரு அம்மாவும், அரசியலும் !
சோறு ஆக்கி முடித்து சமையலறையை விட்டு சின்னமணி வெளியில் வந்தபோது தபாற்காரன் சுத்தமாகப் பொறுமையிழந்திருந்தான். சைக்கிள் மணிச்சத்தத்தில் அவனுடைய ஆத்திரம் வெளிப்பட்டது. சின்னமணி அருகில் வந்ததும் கடிதத்தை எறியாத குறையாக நீட்டிவிட்டு, தனக்குள் திட்டியபடி அடுத்த வீட்டுக்குப் போனான். நீலக்கடிதம். இரண்டாவது மகன் தாசன் மேற்கு யேர்மனியிலிருந்து அனுப்பியிருந்தான். ஈரக்கையை சீலையில் துடைத்துவிட்டு, கடிதத்தைப் பிரித்தபடி சின்னமணி வீட்டுக்குள் வந்தாள். அன்புள்ள அம்மா, அண்ணாவில் ஆரம்பித்து, நலமறிய அவாவி, இறைவனை வேண்டி, தொடர்ந்த கடிதத்தில், சில புதினங்களும் … Read more