
எனக்கு பதினாறு அல்லது பதினேழு வயதிருக்குமெண்டு நினைக்கிறன். புகலிட இலக்கியத்தில ஈடுபாடு வந்த காலம். ‘ராதா பெரிசான பின்” எண்ட ஒரு சிறுகதை(பார்த்திபன் எழுதியது) வாசிச்சு அதிர்ந்துபோனன். பொம்பிளையளுக்கு முதல் முதல் ரத்தம் வாறது பற்றியும் அதை நாங்கள் பெருமையா கொண்டாடிறத கேள்விகேட்டும் எழுதப்பட்டிருந்த கதை அது. இந்தக் கதை பற்றிக் கதைக்கேக்க ரத்தம் வாறது எண்டு பொம்பிள பிறன்ஸ்சோட கதைக்கிறதே வெக்கமா இருந்திது.
எண்டாலும் இந்தக் கதைதான் என்னைப் பிறகு சாமத்தியம் சடங்கு எண்டது பற்றியெல்லம் கேள்விகேக்க வைச்சிது. கேள்விகளுக்குள்ளால பதில்களெல்லாம் கிடைக்கேக்கதான் எனக்கு வெக்கமா இருந்திது. நான் ஒற்றைக் காலில நிண்டு சாமத்தியச் சடங்கு செய்விச்சது எள்வளவு கேவலமெண்டு. அதுக்குப் பிறகெல்லாம் இப்பிடிப்பட்ட கொண்டாட்டங்களுக்குப் போறேல்லயெண்டு யோசிச்சு போறதையும் நிப்பாட்டீற்றன்.”
–
http://puluthi.blogspot.ch/2005/04/