கெட்டன வாழும்

இந்தியா. ராஜீவ் காந்தி கொலையுண்டு சில வருடங்கள் கழிந்து- வெளியே மத்தியான வெயில் எரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளே இருளாயிருந்த அறையில் அவன் பிளேன்ரீ குடித்துக் கொண்டிருந்தான். அதுதான் அவனது மத்தியான உணவு. காலை உணவும் கூட. மிகவும் சிறிய அந்த அறை எங்கும் தட்டுமுட்டுச் சாமான்களும், கடுதாசிகளும் பரவிக் கிடந்தன. யன்னல்கள் எதுவுமில்லை. பதிலாக கூரையில் இரண்டு கண்ணாடி ஓடுகள். சிதறிக் கிடந்த பொருட்களுக்கிடையில் அவன் இரவு படுத்திருந்த கிழிந்து போன பாய். பழைய சாமான்கள் போட்டு … Read more

மூக்குள்ளவரை !

‘சுட்டும் விழிச்சுடரே…. எங்கையோ பற்றிக்கொண்டதே..’ எண்டு அஸின் ஆட, ரசிச்சுப் பாத்துக் கொண்டிருக்கேக்கதான் எனக்கு வயசு போட்டுதெண்டு கவலை வந்திது. பண்டரிபாய், சௌகார்ஜானகி ரசிகரை எங்கடை காலத்திலை பாத்து சிரிச்சது இப்ப ஞாபகம் வர, ஒரு மாதிரித்தான் இருக்குது. இன்னும் ஒரு பத்து வருசத்திலை, ரஹ்மானின்ரை அல்லாட்டி யுவனின்ரை ஸ்பீற் பீற் கேட்டுக்கொண்டிருந்தா என்னைப் பாத்து சின்னனுகள் சிரிக்குமோ எண்டு ஒரு பியூச்சர் பயம் வரேக்கை… ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ இந்த நேரத்திலை ஆர் என்னட்டை வாறாங்கள் எண்ட கேள்வியோடை, … Read more

கல் தோன்றி

இன்ரநெற்றும், சற்றலைற்றும் இல்லாத ஆயிரத்து தொளாயிரத்து ஆரம்பத்தில் ஒருநாள். பேய் மழை அடித்து ஊத்திக் கொண்டிருந்தது. யுத்த விமானங்களோ அல்லது பீரங்கிகளோ வீசும் குண்டுகளைப் போல இடி காதைப் பிளந்தது. மின்னல் அகோரமாய் வெட்டிக் கொண்டிருந்தது. மற்றும்படி மத்தியான நேரத்துக்கு ஒவ்வாத இருட்டு. மழை தொடர்ந்தும், சத்தமாயும்பெய்தது. மரங்கள் முறிந்து தாறுமாறாய் விழுந்தன. வெள்ளம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கரை புரண்டது. ஒழுங்கைகள் எதுவும் தெரியாதபடி எங்கும் வெள்ளம். பள்ளக்குடி ஊரில், வெளியில் மழையில் மாட்டிக் கொண்டவர்களைத் தவிர … Read more